வலையுட்டம் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தாகிவிட்டது.
என்ன எழுத? கதையா கவிதையா கட்டுரையா....
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டு என்னோட எழுத்துக்களை படிக்க
வேண்டியது நம்ம வலை நண்பர்களோட காலத்தின் கட்டாயம். நமக்கென்ன? எழுதித் தள்ளுவோம்.
முதல்ல வர்ரது என்னோட கல்லூரி நினைவுகள் சில.
அப்ப ஃப்ரெண்ட்ஸ் எட்டு பேர் சேர்ந்து காலேஜ் படிக்கும் போது ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம்.
அந்த வீட்டுல கீழ ஓனர். முதல் மாடி நாங்க. அதுக்கு மேல மொட்டை மாடி.அந்த மொட்டை மாடியில் அழகா நடுவுல அந்தக் காலத்து ஸ்டைல்ல ஒரு சின்ன மண்டபம் தூண்லாம் வச்சு.
எங்க ஹால் ரூம்லாம் தாண்டி பின்னாடி ஒரு ஒப்பன் ஸ்பேஸ். அங்க வாஷ் பேசின் . அந்த ஒப்பன் ஸ்பேஸ்லயிருந்து தான் மொட்டை மாடிக்குப் படி.
ஒரு சனிக்கிழமை மதியம். நாடார் மெஸ்ல ஃபுல் மீல்ஸ் கட்டிட்டு வந்து கொஞ்ச நேரம் ரம்மி விளையாடிவிட்டு தூங்கினோம். ரம்மியா? படிப்பெல்லாம் இல்லையான்னு நீங்க கேட்டிங்களா இப்ப? படிப்பெல்லாம் பரீட்சை வரும்போது தாங்க. மத்த நேரம் எவ்வளவு வேலை இருக்கு.. காலேஜ் போகனும் ... ஸைட் அடிக்கனும்..சினிமாவுக்குப் போகனும்...
சரி.நம்ம மேட்டருக்கு வருவோம். எங்க செட்ல கோபால்னு மெட்ராஸ் மச்சான் ஒருத்தன்.வாயத் திறந்தா CM எனக்கு சொந்தக்காரரும்பான் கமிஷனர் எங்க மாமாம்பான்..
ரீல் மன்னன்...ஆனா எதாவது பிரச்னைன்னா முதல்ல எடத்தக் காலி பண்ணியுருவான்.
சாயந்திரம் 5 மணி இருக்கும். தலைவர் கோபால் தூங்கி எந்திருச்சு வந்து வாஷ் பேஸின் கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாரு.
அப்ப தான் மாடியில இருந்து நம்ம அழையா கெஸ்ட்
Mr.Monkey கூட இன்னொரு ஃப்ரெண்டையும் கூட்டிக்கிட்டு படியில இறங்கி வந்தாரு. உள்ள இருந்து இதப் பார்த்துட்டு உடனே நான் ஒப்பன் ஸ்பேஸ் க்லோஸ் பண்ற கதவச் சாத்திட்டேன்.கோபால் வெளிய நின்னத நான் பார்க்கல.
Mr.Monkeys ரெண்டு பேரும் படியிலயே உட்கார்ந்துட்டாங்க.
சத்தம் போட்டா அட்டாக் பண்ணியுருவாங்களோன்னுட்டு நம்ம கோபால் மெதுவா "டேய் கதவத் திறடா..நான் இங்க நின்னுட்டு இருக்கேன்".
திறக்கப் போன என்ன இன்னொரு ஃப்ரெண்டு...டேய் திறக்காத...ஒன்னு கதவத் திறந்தா Mr.Monkeys உள்ள வந்துருவாங்க...இன்னொன்னு நேத்து கோபால் பெர்த்டேக்கு A1 ஹோட்டல்ல ட்ரீட் கேட்டோம்..சினிமா கேட்டோம்.ஒன்னும் செய்யல அவன்.கிடக்கட்டும் விடுன்னான்.எனக்கும் சரிதான்னுப் பட்டுது.திறக்கல.யாரையும் திறக்கவும் விடல.
சத்தம் போடாம 15நிமிஷம் வாய மட்டும் லேசா திறந்து ப்ளீஸ்டா...திறங்கடா...ன்னு அவன் கெஞ்சுனது...
Mr.Monkeys நகராம நமக்கு ஹெல்ப் பண்ணுனது...
அப்புறம் நம்ம கிருஷ்ணன் போய் கதவத் திறந்துவிட்ட வுடன ஜெட் ஸ்பீட்ல சாயந்திர நேரத்துல கூட வேர்த்துபோய் உள்ள வந்து எங்களையெல்லம் துரத்தி துரத்தி கம்பால கோபால் அடிச்சது....
ஆஹா.......எவ்வளவு இனிமையான நாட்கள்...
மீண்டும் சந்திப்போம் என் நண்பர்களே.....
Thursday, November 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Na 1st blog elutha aramichapayum ipdi than :D enna eluthrathu yaru padippa yaru comment panuvaney therila :D Athukapram than terinjathu namala maari neraya vettis irukunu! :D
Happy blogging! :)
நட்பைப் பற்றீ பேசும்போதேஅதில் எத்தனை எத்தனை மகிழ்ச்சி..
வெல்கம் டூ ப்ளாக் வோர்ல்ட் ஃபிரண்ட். :-)
குரங்குகளோடு ஒரே அறையில் தங்கியிருக்கும் கோபால் ஏன் இரண்டு குரங்குகளுக்கு மட்டும் அப்படி பயந்தார்????? பாவம்.......
என்னதான் ரீல் மன்னனாக இருந்தாலும் நண்பரை இப்படியா தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது!!!
ரசிக்கும் படியா எழுதியிருக்கிறீங்க!
ஹாய் ராஜ்,
புது பதிவுகளெ காணோம், என்னாச்சு,ரொம்ப பிஸியா?
ஹாய் ராஜ்,
ரொம்ப நாள் ஊருக்கு போய்ட்டீங்க போலிருக்கு,
உங்க கமெண்ட்ஸ் கிடைச்சது, நன்றி ராஜ்,
என்னோட பதிவுகள் எல்லாம் சேர்த்து வைச்சு படிக்கிறீங்கன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷமாயிருந்தது,
அதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!
ponnarasi kothandaraman said
" Athukapram than terinjathu namala maari neraya vettis irukunu! :D "
Happy blogging! :)
--vettis club senior member ponnarasi, unkalukku en varaverpum nanriyum..
"நட்பைப் பற்றீ பேசும்போதேஅதில் எத்தனை எத்தனை மகிழ்ச்சி..
வெல்கம் டூ ப்ளாக் வோர்ல்ட் ஃபிரண்ட். :-)"
my friend,
thanks for your visit.
smiles never end when we think of Friendship.
"ரசிக்கும் படியா எழுதியிருக்கிறீங்க!"
Divya,
Hearty thanks for your visit.
Will come with new blogs in two weeks. ( vera vazhiyilla ...neenga padichu thaan aakanum).
வெல்கம் டூ ப்ளாக் வோர்ல்ட் ஃபிரண்ட். :-)
Hi Raj,
Have a blessed New Year year!!!
From,
Divya.
Hi,
Welcome to the blog world.NIce post. Its always nice to remember good old college days.Reading this I got remembered my looties at college and hostel.
Take care
பொன் வானம் நிஜம்மாகவே பன்னீர் தூவியது உங்கள் பதிவு! வாங்க வாங்க என அன்புடன் வரவேற்கிறோம்!!!!
அன்புடன் அருணா
Post a Comment